வெள்ளி, 17 அக்டோபர், 2008

காதலின் தன்மை

சிகப்பழகு சாதனம் பூசி தோல் வெளுத்த பெண்களிடம் மயங்குவதே காதல் என்று உலகமயமாதல் சிந்தனையை ஊடகங்கள் கூவிக் கொண்டிருக்கும் வேளையில், ‘என் காதலி தேவதை போன்றவள்’ என்று காதலி என்பவள் அழகானவளாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், காதலைக் காதலாகவே பார்த்து, காதலின் தன்மையைக் கெடுக்காமல் காதலை அதன் உணர்வுபடவே கவிதையில் பதிவு செய்வதற்கு பாசாங்கற்ற நேர்மை வேண்டும்..

பசி கிள்ள / துடித்தழும் குழந்தையின் / குரல் / பொருள் / எவரெப்படி விளக்கியும் உணர முடியாது / தாயைப் போல / அப்படித்தான் / நம் காதலும்.இந்தக் கவிதையில் காதலை தாய்க்கும் குழந்தைக்குமான தொப்புள் கொடி உறவோடு சம்பந்தப்படுத்திப் பார்த்திருக்கிறார் இசாக். காதலை தெய்வீக உறவாகப் பார்த்தவர்கள் கூட குழந்தைக்கும் தாய்க்குமான தனிப்பட்ட உறவைப் போலக் கற்பனை செய்து பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். என்றாலும், காதலை அதனை உணர்ந்தவர்கள் மட்டுமே உணர முடியும் என்பதை மிக அழகாகச் சொல்ல இந்த உதாரணத்தை மிகத் திறமையாகவே கையாண்டிருக்கிறார் இசாக்.

காதல் கவிஞர்கள்

காதலை நகரத்துப் பார்வையிலேயே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒருவகை. காதலியை அழகியல் ரீதியாகப் பாராட்டி ‘என் தேவதையே!’ என்று விளித்தே கவிதைத் தொகுப்பை நிரப்பும் காதல் கவிஞர்கள் மற்றொரு வகை. அதீத அழகிய தொகுப்பாக தங்கள் காதல் கவிதைகளைப் படைத்து இளம் காதலர்களைக் கவர்பவர்கள் இன்னொருவகை. இவர்களுக்கிடையில் காதலை மண்சார்ந்து பார்க்கும் கவிஞர்கள் மிக மிகக் குறைவு.நினைத்த நிமிடத்தில் மனசுக்குள் மகிழ்ச்சியை நிரப்பி நெகிழ்வூட்டுகிற உயிர் உணர்வு காதல்.அழகற்ற பெண்களை அழகாக்குவதற்காகவே வருகிறது காதல்

கவிதையே காதலாக..

கவிதை என்பது இதுதான் என்று எப்படி வரையறுக்கப்படவில்லையோ அதுபோலவே காதலும் வரையறுக்கப்படாமலேயே இருக்கிறது. அதனால் தானோ என்னவோ, காதலும் கவிதையும் பிணைந்தே வெளிவருவது போலத் தோன்றுகிறது.காதலே கவிதையாகவும், கவிதையே காதலாகவும் இணைந்திருப்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

காதலைப் பற்றி கவிஞர்கள் பேசும்போது மட்டும் காதலுக்கு அலாதியான சுவை கூடிவிடுகிறது. கவிதை எப்படி உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கிறதோ அதுபோலவே காதலும் உணர்வுகளின் வெளிப்பாடாக அமைகிறது. கவிதையில் வெளிப்படும் அனைத்து உணர்ச்சிகளுக்கும் காதலிலும் இடமுண்டு என்றாலும் காதலைச் சொல்லும் கவிதைகள் மென்மையான உணர்வுகளுக்கே முதலிடம் தருவதாய் அமைந்திருக்கின்றன.

காதல் - உணர்ச்சிகளின் பெருக்கு என்பவர்கள் இருக்கிறார்கள். காதல் உணர்வுபூர்வமானது என்பவர்கள் இன்னோர் வகை. காதல் பருவம் கொண்டு வந்து சேர்க்கும் நோய் என்பாரும் உண்டு. உடல் கவர்ச்சி என்பதை மறைப்பதற்காக பூசப்படும் முலாம்தான் காதல் என்றும் சொல்கிறார்கள். இப்படி ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் கதிரவன் அன்றாடம் உதிப்பது போல பருவம் வந்தவர்களுக்கிடையில் மறக்காமல் பூத்து விடுகிறது காதல்.

வியாழன், 16 அக்டோபர், 2008

ஐன்ஸ்டீன் நகைச்சுவை

ஐன்ஸ்டீன் ஒருமுறை கணப்பு அடுப்பின் அருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டு படித்து கொண்டிருந்தார். திடீரென கணப்பு அடுப்பில் தீசுவாலை எழுந்ததால் வெப்பம் பரவியது. உடனே ஐன்ஸ்டீன் சத்தம் போட்டு வேலைக்காரியை அழைத்து அடுப்பை தள்ளி வைக்க கூறினார். அதற்கு வேலைக்காரி நீங்கள் சற்று தள்ளி அமர வேண்டியதுதானே என்றார். அட இந்த சின்ன விஷயம் தெரியவில்லையே என்று வருத்தப்பட்டாராம்.
----------------------------------
ஜெர்மானிய நாட்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் ஒரு ஞாபக மறதிக்காரர். ஒருமுறை வெளியில் எதற்கோ சென்ற அவருக்கு வீட்டு முகவரி மறந்து விட்டது. எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வரவில்லை..{ நம்ம றெனி மாதிரி..!} வழியில் அவர் பணிபுரியும் நிறுவன விளம்பர பலகையைக் கண்டார்.. அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முகவரியைக் கேட்டார்.. அவர்களோ, அது ரகசியம்.. வெளியார் எவருக்கும் அறிவிக்க மாட்டோம் என்றனர். ஐன்ஸ்டீன் நான் வெளியாள் அல்லன்.. நான் தான் அந்த ஐன்ஸ்டீன்.. என்றாராம் பரிதாபமாக...!!!

நியூட்டன் நகைச்சுவை

ஒரு முறை தன் வீட்டில் ஒதுங்கிய பூனையும் அதன் குட்டிகளையும் பராமரிக்க ஒரு சிறிய மர வீட்டை கட்டலாம் என்று யோசித்தார். அதற்கான் டிசைனும் செய்தார். பூனைகள் படுக்க மெத்தை போன்றதொன்று உள்ள அறை, கழிப்பிடம் முதலியவைகளை திறம்பட அமைத்தார். பெரிய பூனை செல்ல பெரிய கதவும், சிறிய பூனை செல்ல சிறிய கதவும் கூட அமைத்தார்.ஒரு மர தச்சனிடம் டிசைனை காட்டி இதுபோல் வீடு வேண்டுமென்றார்.அவன் சிரிக்க ஆரம்பித்தான். காரணம் கேட்க,பூனைகள் படுக்கைகளையும், கழிப்பிடத்தையும் பயன்படுத்த வேண்டுமானால் பழக்கலாம். ஆனால், பெரிய கதவை பயன்படுத்தியே சிறிய பூனையும் நுழையகூடியதாய் இருக்க சிறிய கதவையும் அமைத்தை கண்டு சிரித்தேன் என்றான்

கலைவாணரின் நகைச்சுவை

ஒருமுறை கலைவாணர் நாடகத்தில் கோமாளியாக நடித்தார். ராஜா வேடமிட்டவர் மந்திரியைப் பார்த்து ஒவ்வொரு சிற்றரசரும் என்ன கப்பம் கட்டினார்கள் என விசாரிக்கும் காட்சி.ஒரு கட்டத்தில் கலிங்க ராஜா என்ன கட்டினார் என்று கேட்க மந்திரி வசனத்தை மறந்து பேய் முழி முழிக்க, இதை அறியாத அரசர் இன்னுமொரு தடவை சத்தமாக கேட்டார்..கலிங்க ராஜா என்ன கட்டினார்..?கலைவாணர் உடனடியாக " வேஷ்டி" என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

பிரபலங்களின் நகைச்சுவை

ஒருமுறை நம்ம ஆபிரஹாம் லிங்கன் அவர்களை காண ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் வந்திருந்தாராம், அந்த நேரம் பார்த்து அவர் வெளியே போயிருக்க, கொஞ்சம் நேரம் காத்திருந்து கடுப்பாகி, வீட்டு வாசலில் கழுதை என்று எழுதி வைத்து சென்றாராம்.வந்தவர் யார் என்பதை எழுத்தை வைத்து அறிந்த ஆபிரஹாம் லிங்கம், அடுத்த நாள் அவரை சந்தித்து நேற்று நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க போலிருக்குது, உங்க பெயரை எழுதி வைச்சிட்டு போனீங்க, அதனால யார் வந்தது என்பதை அறிய ரொம்ப வசதியா போச்சு என்றாராம்.