*
ஒரு கம்பி
மத்தாப்பு
எரிந்து முடிய
41
விநாடிகள்தான் ....
எனக்குள்
உன்னலேற்பட்ட
நெருப்பு
எரிகிறது
யுகயுகமாய்...
*
பாறைகள்
உடைந்தும்
அழிந்தும்
போனால்
சிதைவுர்தலாம்...
என் மனம்
உன்னில்
புதையுண்டு போனதே
என்னவென்பாய்?..
வெள்ளி, 27 மார்ச், 2009
காதல் அலை வரிசை.. ...
*
பொருத்தமான
பொய்கூடச்
சொல்லத் தெரியவில்லையென
வருத்தபடுகிறேன்
அலைவரிசையின்
தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருந்து
மீள்கையில்....
*
எங்கேயோ
எனக்குப் பிடித்தமான
வானொலி நிகழ்ச்சியைக்
கேட்டு உடனே
எனக்கு பேசி
அந்நிகழ்ச்சியை
கேட்கச் செய்கிறாய்...
எனக்குப் பிடித்தமான
நீ மட்டும்
எப்போதுமென்
அலைவரிசைக்குள்
வராமல் தப்பிக்கிறாய்.....
பொருத்தமான
பொய்கூடச்
சொல்லத் தெரியவில்லையென
வருத்தபடுகிறேன்
அலைவரிசையின்
தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருந்து
மீள்கையில்....
*
எங்கேயோ
எனக்குப் பிடித்தமான
வானொலி நிகழ்ச்சியைக்
கேட்டு உடனே
எனக்கு பேசி
அந்நிகழ்ச்சியை
கேட்கச் செய்கிறாய்...
எனக்குப் பிடித்தமான
நீ மட்டும்
எப்போதுமென்
அலைவரிசைக்குள்
வராமல் தப்பிக்கிறாய்.....
காதல் சதுரங்கம்..
*
காலம்
தன் சதுரங்கக் காய்களை
திட்டமின்றியே நகர்த்துகிறது...
யானையைப்போல்
நேர்க்கொட்டிலும்
தளபதிகளைப் போல்
குருக்குவாட்டிலும்
நகரும் தகுதி
ராணிக்கு இருப்பது போல்
ராஜாவுக்கு இருப்பதில்லை...
ஒவ்வொரு
கட்டமாகத்தான்
நகர முடிகிறது
சிப்பாய்களைப்போல்...
*
பார்த்தலிலோ
கேட்டலிலோ
உன் பெயர்
பதிவாக
இதயம் அதிர்வுறுகிறது..
ரிக்டர் அளவுகோலில்
சொல்வதனால்
எப்போதாவதுதான்
நிலநடுக்கம்
ஏற்படவேண்டும்...
எப்போதும் ஏற்பட்டால்...
காலம்
தன் சதுரங்கக் காய்களை
திட்டமின்றியே நகர்த்துகிறது...
யானையைப்போல்
நேர்க்கொட்டிலும்
தளபதிகளைப் போல்
குருக்குவாட்டிலும்
நகரும் தகுதி
ராணிக்கு இருப்பது போல்
ராஜாவுக்கு இருப்பதில்லை...
ஒவ்வொரு
கட்டமாகத்தான்
நகர முடிகிறது
சிப்பாய்களைப்போல்...
*
பார்த்தலிலோ
கேட்டலிலோ
உன் பெயர்
பதிவாக
இதயம் அதிர்வுறுகிறது..
ரிக்டர் அளவுகோலில்
சொல்வதனால்
எப்போதாவதுதான்
நிலநடுக்கம்
ஏற்படவேண்டும்...
எப்போதும் ஏற்பட்டால்...
காதல்..சிக்னல்..
*
சிக்னல் கிடைக்காமல்
ரயில் ஒரு
நிறுத்தத்தில் நின்ற பொது
எட்டிப்பார்த்தேன்
வெளியே
நீயும் கூட..
எனக்கு
சிக்னல் கிடைத்தது
அப்போதுதான்...
*
உணவுக்குழாயில்
செல்லும் உணவு
சில நேரங்களில்
காற்றுகுழாய்க்குள்
நுழைந்து விடுவதுண்டு....
புரையேறுகையில்
யாரோ நினைக்கிறார்களென
உன்னை
நினைவூட்டுகிறார்கள்
உடனிருப்பவர்கள்...
சிக்னல் கிடைக்காமல்
ரயில் ஒரு
நிறுத்தத்தில் நின்ற பொது
எட்டிப்பார்த்தேன்
வெளியே
நீயும் கூட..
எனக்கு
சிக்னல் கிடைத்தது
அப்போதுதான்...
*
உணவுக்குழாயில்
செல்லும் உணவு
சில நேரங்களில்
காற்றுகுழாய்க்குள்
நுழைந்து விடுவதுண்டு....
புரையேறுகையில்
யாரோ நினைக்கிறார்களென
உன்னை
நினைவூட்டுகிறார்கள்
உடனிருப்பவர்கள்...
காதல் ... காதல்..ஒன்றே..
*
மெதுவாக
ஊர்ந்து செல்லும்
ரயிலாகத்தான்
உன் நினைவு
தொடங்கியது...
பின்
தடதடவென
விரையும் ரயிலாக
வேகமெடுத்து
இப்போதெல்லாம்
நிறுத்தமின்றியே
பயணிக்கிறது..
*
'புத்தகங்கள்
படித்தால்தான்
புதிய சிந்தனை
பிறக்கும் '
என்கிறேன் ...
'வா
படிக்க வேண்டும்
உன்னை'
என்கிறாய்.!
காதல் ...காதல் மட்டும்..
*காதலையே
செல்வதாகச் சிலர்
சலித்துக் கொள்கிறார்கள்..
எல்லோருக்கும்
தெரிந்த ஒன்றைச்
சொல்வதில்
தவறென்ன?..
* ஒவ்வொரு முறையும்
கோபத்தில்
உன்னோடு
பேசக்கூடாதென்றுதான்
நினைக்கிறேன்..
ஏனோ
உணதழைப்பு
வந்தவுடன்
தவறவிடாமல்
அனைத்துக் கொள்கிறேன்...
செல்வதாகச் சிலர்
சலித்துக் கொள்கிறார்கள்..
எல்லோருக்கும்
தெரிந்த ஒன்றைச்
சொல்வதில்
தவறென்ன?..
* ஒவ்வொரு முறையும்
கோபத்தில்
உன்னோடு
பேசக்கூடாதென்றுதான்
நினைக்கிறேன்..
ஏனோ
உணதழைப்பு
வந்தவுடன்
தவறவிடாமல்
அனைத்துக் கொள்கிறேன்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)