வியாழன், 16 அக்டோபர், 2008

கலைவாணரின் நகைச்சுவை

ஒருமுறை கலைவாணர் நாடகத்தில் கோமாளியாக நடித்தார். ராஜா வேடமிட்டவர் மந்திரியைப் பார்த்து ஒவ்வொரு சிற்றரசரும் என்ன கப்பம் கட்டினார்கள் என விசாரிக்கும் காட்சி.ஒரு கட்டத்தில் கலிங்க ராஜா என்ன கட்டினார் என்று கேட்க மந்திரி வசனத்தை மறந்து பேய் முழி முழிக்க, இதை அறியாத அரசர் இன்னுமொரு தடவை சத்தமாக கேட்டார்..கலிங்க ராஜா என்ன கட்டினார்..?கலைவாணர் உடனடியாக " வேஷ்டி" என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

கருத்துகள் இல்லை: