வெள்ளி, 27 மார்ச், 2009

காதல் சதுரங்கம்..

*
காலம்
தன் சதுரங்கக் காய்களை
திட்டமின்றியே நகர்த்துகிறது...

யானையைப்போல்
நேர்க்கொட்டிலும்
தளபதிகளைப் போல்
குருக்குவாட்டிலும்
நகரும் தகுதி
ராணிக்கு இருப்பது போல்
ராஜாவுக்கு இருப்பதில்லை...

ஒவ்வொரு
கட்டமாகத்தான்
நகர முடிகிறது
சிப்பாய்களைப்போல்...

*
பார்த்தலிலோ
கேட்டலிலோ
உன் பெயர்
பதிவாக
இதயம் அதிர்வுறுகிறது..

ரிக்டர் அளவுகோலில்
சொல்வதனால்
எப்போதாவதுதான்
நிலநடுக்கம்
ஏற்படவேண்டும்...
எப்போதும் ஏற்பட்டால்...


கருத்துகள் இல்லை: