வியாழன், 2 ஏப்ரல், 2009

ஊசலில்...

இரவுக்கும்
விடியலுக்குமான
இடைவெளியில்
தொலைகிறது
நம்பிக்கையின் கணம் ...

நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையிலான ஊசலில்
அலைகிறது மனம்...

கருத்துகள் இல்லை: