சனி, 28 மார்ச், 2009

காதல் உச்சம்...

*
புணர்தலின்
உச்சத்தில்
முனகுவதை
எண்ணுவதெல்லாம்
உன்னாலெழுந்த
கவிதையென
என்றாவது
உணர்ந்திருக்கிறாயா?

*
புத்தகம்
படிக்கும் நேரம்
உனக்காக
ஒதுக்கப்பட்டது..

பின்னர்
தெரிந்து கொண்டேன்..

புத்தகம் படிப்பதும்
உன்னிடம் பேசுவதும்
ஒன்றுதானென...

கருத்துகள் இல்லை: