சனி, 28 மார்ச், 2009

காதல் தேவதை..

எனது
பலநூறு இரவுகளில்
ஒருநாள்
பட்டாம்பூச்சியோடு
படுத்துக் கிடந்தேன்..

இறக்கைகளுக்குள்
குளிர்காய்ந்தேன்
குழலுக்குள்
உளவு பார்த்தேன் ...

வயிற்றுக் கண்டங்களில்
உறங்கிப் போனேன்...
வண்ணங்களில்
வாசம் கற்றேன்...

பட்டாம்பூச்சியோடு
உறவாயிருந்த அந்த
இரவில்தான்
சாபம் நீங்கி
தேவதையானேன்...

கருத்துகள் இல்லை: